நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பெங்களூரு ரயில் நிலையத்தில் கிடந்த டிரம்முக்குள் பெண் உடல்; இது 2வது சம்பவமா?

கர்நாடக மாநிலம் பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பிளாஸ்டிக் டிரம்முக்குள் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:44 am

ANI


பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெந்தலூரு மாவட்டம் விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பிளாஸ்டிக் டிரம்முக்குள் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த பெண்ணின் வயது 31 - 35க்குள் இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு ஆட்டோ ரிக்சாவில் மூன்று பேர் அந்த டிரம்மை எடுத்து வந்து ரயில் நிலையத்தில் வைத்துச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினர், மூன்று பேர் அந்த டிரம்மை தூக்கிக் கொண்டு வந்து ரயில் நிலையத்தில் வைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்ததைக் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து, அந்த மூன்று பேரையும் தேடும் பணியையும், பெண்ணின் அடையாளத்தைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதமும், இதேப்போல 31 - 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.