லாகூர்: 1947ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிந்த சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் 75 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துளள்து.
பாகிஸ்தானின் கர்தார்பூர் வளாகததில் குருதேவ் சிங் மற்றும் தயா சிங் ஆகியோர் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.
இதையும் படிக்க.. சுஷ்மிதாவை தாக்கிய மாரடைப்பு சொல்லும் பாடங்கள்
இருவரும் 75 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பதால் ஏற்பட்ட மகிழ்ச்சியால் கண்ணீர் விட்டனர். பின்னர் அது ஆனந்தமாக மாறி, ஒருவர் மீது ஒருவர் பூக்களை தூவி, பாடல்களைப் பாடி கொண்டாட்டக் களமாக ஆனது.
இருவரும் ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள். இவர்களது தந்தை இறந்துவிட்டதால், தந்தையின் நண்பர் கரீம் பாக்சாவின் கவனிப்பில் இருந்தனர். பிரிவினையின்போது கரீம் மூத்த மகன் குருதேவுடன் பாகிஸ்தான் சென்றுவிட, மற்றொரு உறவினருடன் தயா சிங் தங்கிவிட்டார். பாகிஸ்தான் சென்ற கரீம் பஞ்சாப் மாகாணத்தில் வசித்து வந்தார். குருதேவ் சிங் பெயர் குலாம் முகமது என்று மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. நிலநடுக்கம் தாக்கினால் சென்னை தாங்குமா?
குருதேவ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, குருதேவின் மகன் முகமது ஷரிஃப், இந்திய அரசுக்கு, தனது தந்தை ஒரு கடிதம் எழுதியிருந்ததாகவும், அதில் தனது சகோதரர் தயா சிங் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்ததாகவும் ஊடகத்தில் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க.. குழந்தைகளுக்கு தொண்டைவலி, இருமலா? வீட்டிலேயே இருக்கு வைத்தியம்
ஆறு மாதங்களுக்கு முன்பு, சமூக ஊடகங்களின் வாயிலாக தயா சிங் எங்கிருக்கிறார் என்பதை அறிந்து அவர்களை சந்திக்க திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி, இருவரது குடும்பத்தினரும் கர்தார்புர் வளாகத்தில் சந்தித்து தங்களது ரத்த உறவை உறுதி செய்து கொண்டனர். இதையெல்லாம் பார்க்க தனது தந்தை குருதேவ் இல்லையே என்று மனம் வருந்தினார் முகமது ஷரிஃப்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
‘நரகக் குழிகள்’: இந்தியா குறித்த சா்ச்சைக்குரிய பதிவைப் பகிா்ந்த டிரம்ப்!

ஆற்காட்டில் வாக்களித்த வேட்பாளா்கள்

காஞ்சிபுரத்தில் வாக்களித்த வேட்பாளா்கள்

மீன ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

