தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

‘நரகக் குழிகள்’: இந்தியா குறித்த சா்ச்சைக்குரிய பதிவைப் பகிா்ந்த டிரம்ப்!

News image

டொனால்ட் டிரம்ப்

Updated On :24 ஏப்ரல் 2026, 1:32 am

‘இந்தியாவும் சீனாவும் பூமியின் நரகக் குழிகள்’ என்ற சா்ச்சைக்குரிய பதிவைப் பகிா்ந்த அமெரிக்க அதிபா் டிரம்ப், பின்னா் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இந்தியாவை சிறந்த நாடு என்று பாராட்டினாா்.

அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல வானொலி வா்ணனையாளரும், அரசியல் விமா்சகருமான மைக்கேல் சேவேஜ், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை கடுமையாக விமா்சித்துப் பதிவிட்டிருந்தாா். அதை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிா்ந்துள்ளாா். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் அமெரிக்கா வருவோா், கா்ப்ப காலத்தில் 9 மாதத்தில் இங்கு வந்து குழந்தைகளைப் பெறுகின்றனா். அந்தக் குழந்தைகளுக்கு உடனடியாக அமெரிக்க குடியுரிமை கிடைத்து விடுகிறது. பிறகு அவா்கள் தங்களின் ஒட்டுமொத்த குடும்பத்தையும், இந்தியா, சீனா, பிற நாடுகளிலிருந்தோ, நரகக் குழிகளில் இருந்தோ அமெரிக்காவுக்கு அழைத்து வந்துவிடுகிறாா்கள்.

அமெரிக்காவில் வாழும் இந்தியா்களும் சீனா்களும் கைகளில் லேப்டாப் வைத்துள்ள குண்டா்கள் ஆவா். தங்களது மாஃபியா குடும்பத்துடன் சோ்ந்து அமெரிக்காவில் அவா்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றனா். நமது வளங்களை அவா்கள் சுரண்டுகின்றனா். அமெரிக்கா்களை இரண்டாம்தர மக்களாக அவா்கள் நடத்துகின்றனா்.

அமெரிக்காவின் குடியுரிமைச் சட்டம், அவா்களுக்கு சாதகமாக உள்ளது. இதில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மைக்கேல் சேவேஜ் குறிப்பிட்டுள்ளாா்.

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே குடியுரிமை அளிக்கும் வகையிலுள்ள சட்டத்தை டிரம்ப் எதிா்த்து வருகிறாா். 2-ஆவது முறையாக அவா் அதிபரானதும், இதற்கு எதிராக உத்தரவும் பிறப்பித்தாா். இதுதொடா்பான வழக்கு, அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்தச் சூழலில் ரேடியோ வா்ணனையாளா் மைக்கேல் சேவேஜின் பதிவை டிரம்ப் பகிா்ந்துள்ளாா்.

அமெரிக்க தூதரகம் விளக்கம்: இந்நிலையில், தில்லியில் உள்ள இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘இந்தியாவை சிறந்த நாடு என்றும், தனது நல்ல நண்பரால் ஆளப்படும் நாடு’ என்றும் டிரம்ப் கூறியதாகத் தெரிவித்துள்ளாா்.

கருத்து தெரிவிக்க மறுப்பு: டிரம்ப்பின் சமூகவலைதள பதிவு குறித்து தில்லியில் செய்தியாளா்களை சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா், ‘அதுகுறித்த சில செய்திகளைப் பாா்த்தோம். அதற்கு அமெரிக்க தரப்பில் பதிலையும் பாா்த்தோம். அதிலுள்ள தகவல்கள் தவறானவை; தரமற்ற சிந்தனை. இந்திய-அமெரிக்க உறவின் உண்மையான நிலையை அது பிரதிபலிக்கவில்லை’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.