எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தில்லியில் இதுவரை 4,469 பேருக்கு டெங்கு பாதிப்பு: 9 பேர் பலி!

தலைநகர் தில்லியில் கடந்தாண்டு 4,469 பேருக்கு டெங்கு தொற்று பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2022-ம் ஆண்டில் டெங்குவால் 9 பேர் இறந்துள்ளதாக தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

News image
தில்லியில் இதுவரை 4,469 பேருக்கு டெங்கு பாதிப்பு: 9 பேர் பலி!
Updated On :1 பிப்ரவரி 2024, 6:38 pm

ANI

தலைநகர் தில்லியில் கடந்தாண்டு 4,469 பேருக்கு டெங்கு தொற்று பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2022-ம் ஆண்டில் டெங்குவால் 9 பேர் இறந்துள்ளதாக தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, 

2022-ஆம் ஆண்டில் 4,469 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 

டிசம்பர் கடைசி வாரத்தில் மட்டும் 108 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. 2022-ஆம் ஆண்டில் மலேரியாவால் ஒருவர் உயிரிழந்தார். 

2017, 2018, 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் தில்லியில் மலேரியாவால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 2020இல் ஒருவர் பலியாகியுள்ளார். 

அதேசமயம், டிசம்பர் கடைசி வாரத்தில், டிசம்பர் 31 வரை 1 சிக்குன்குனியா வழக்குப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் 48 சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளன. சிக்குன்குனியாவால் யாரும் இறக்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.