பெங்களூருவின் மாரத்தஹள்ளியில் ரூ.1 கோடிக்கு கூலிப்படை ஏவி தன் தந்தையைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பனத்தூர் வீரப்பாலே பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் மனைவி, மகன் மணிகண்டா(30) ஆகியோருடன் வசித்துவந்தார் நாராயணசாமி(71).
கடந்த பிப்.13-ஆம் தேதி தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில், மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் மகன் மணிகண்டா மற்றும் அவரது நண்பர்கள் ஆதர்ஷா, சிவக்குமார் ஆகியோரை சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டு போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
மகன் மணிகண்டனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில்,
மணிகண்டனுக்கு திருமணமான நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக தனது முதல் மனைவியை கொன்றுள்ளார். அவருக்கு மீண்டும் இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர். அவருடனும் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரில் 28 அடுக்குமாடி குடியிருப்புகள், பல ஏக்கர் நிலத்துக்கும் சொந்தக்காரரான நாராயணசாமி, அதில் ஒன்றையும், சில ஏக்கர் நிலத்தையும் மகனின் இரண்டாவது மனைவிக்கு எழுத முடிவு செய்தார்.
இதனால் மனமுடைந்த மணிகண்டன், தந்தையை கொல்ல முடிவு செய்தார். கூலிப்படை நியமித்து அவர்களுக்கு ரூ.1 கோடி கொடுப்பதாகப் பேரம் பேசியதையடுத்து,
முன்பணமாக ரூ.1 லட்சம் கொடுத்ததாக தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்குப் பதிந்து மாரத்தஹள்ளி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


