ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

இந்திய யுபிஐ - சிங்கப்பூர் பேநௌ இணைப்பால் யாருக்கு நன்மை?

இந்தியாவின்  எண்ம பணப்பரிமாற்ற தளமான யுபிஐ மற்றும் சிங்கப்பூரின் பே நௌ ஆகியவை இணைக்கும் பணி தொடங்கியது.

News image
Updated On :21 பிப்ரவரி 2023, 9:32 am

இந்தியாவின்  எண்ம பணப்பரிமாற்ற தளமான யுபிஐ மற்றும் சிங்கப்பூரின் பே நௌ ஆகியவை இணைக்கும் பணி தொடங்கியது. இதனை பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

எண்ம பரிவர்த்தனைனை முன்னெடுத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அடுத்த நடவடிக்கையாக, வெளிநாட்டு எண்ம பரிவர்த்தனை தளங்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

முதல்கட்டமாக இந்தியாவின் யுபிஐ மற்றும் சிங்கப்பூரின் பேநௌ தளங்கள் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் வாழும் சிங்கப்பூர் மக்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

Story image

எண்ம பரிவர்த்தனை செயலிகள் மூலம், மக்கள், பணப்பரிமாற்றத்துக்கு தங்களது வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டிய அபாயத்திலிருந்து தடுக்கப்பட்டனர். பணம் நேரடியாக ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு நாள் முழுவதும் எந்த நேரத்திலும் தங்கு தடையின்றி செல்ல வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

பே நௌ, சிங்கப்பூரில் மிக வேகமாக இயங்கும் எண்ம பரிமாற்ற தளமாக உள்ளது. இந்த நிலையில்தான் யுபிஐ மற்றும் பேநௌ இணைக்கப்படுகிறது. இதன் மூலம் வெளிநாட்டு வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பும் போது நேரிடும் கூடுதல் செலவு தவிர்க்கப்படும். குறைந்த கட்டணத்தில், விரைவாக, எந்த நேரத்திலும் பணம் அனுப்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.