தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து சென்றவர்: உதவிய காவல்துறை

மருத்துவமனைக்கு உடல்நலம் பாதித்த மனைவியுடன் சென்ற நிலையில், அவர் வழியிலேயே பலியானதால், மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து கொண்டு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

News image

மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து சென்றவர்: உதவிய காவல்துறை

Updated On :9 பிப்ரவரி 2023, 12:43 pm

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தைச் சேர்ந்த நபர், ஆந்திர மாநிலத்தில் உள்ள மருத்துவமனைக்கு உடல்நலம் பாதித்த மனைவியுடன் சென்ற நிலையில், அவர் வழியிலேயே பலியானதால், மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து கொண்டு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

கையில் பணமில்லாமலும், அமரர் ஊர்தியை அழைக்க வழியில்லாததாலும், பல கிலோ மீட்டர் தொலைவுக்கு மனைவியின் உடலை தோளில் சுமந்தபடி வந்து கொண்டிருந்த நபரை பார்த்த காவல்துறையினர், உடனடியாக வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து அனுப்பி வைத்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் சங்கிவலசாவில் உள்ள மருத்துவமனையில், பங்கி தனது மனைவி குரு (30)வை அனுமதித்திருந்தார். சிகிச்சையில் அவர் குணமடையாததால், மனைவியை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

மருத்துவமனையில் இருந்து ஒரு ஆட்டோவில் குருவை ஏற்றிக் கொண்டு 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒடிசா மாநிலம் சொராதா கிராமத்துக்கு வந்து கொண்டிருந்தார். ஆனால், வழியிலேயே குரு இறந்துவிட்டதால், ஆட்டோ ஓட்டுநர் பங்கியையும் அவரது மனைவியின் உடலையும் வழியிலேயே இறக்கிவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.

செய்வதறியாது தவித்துப்போன பங்கி, மனைவியின் உடலை தோளில் சுமந்தபடி தன் ஊரை நோக்கி நடந்தார். 20 கிலோ மீட்டர் இப்படியே அவர் நடந்து வர இன்னமும் 80 கிலோ மீட்டர் தொலைவு இருந்தது வீடு வந்து சேர.

இதனைப் பார்த்த பொதுமக்கள், உள்ளூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த அவர்கள், பங்கியிடம் விசாரித்தனர். அவர் பேசும் மொழி ஆந்திர காவல்துறையினருக்குப் புரியாததால், ஒடிசா  மொழி பேசும் ஒருவர் அழைத்து வரப்பட்டு அவரிடம் பங்கி என்ன சொல்கிறார் என்று கேட்டறியப்பட்டு, அவருக்கு வாகனம் ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் பங்கி மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு சொந்த ஊர் நோக்கிப் புறப்பட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.