தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

நாடாளுமன்றத்தில் இன்று.. ஒரு பக்கம் 'மோடி மோடி', மறுபக்கம் 'ஜோடோ ஜோடோ'

மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக தாக்கல் செய்துள்ளார்.

News image
நாடாளுமன்றத்தில் இன்று.. ஒரு பக்கம் 'மோடி மோடி', மறுபக்கம் 'ஜோடோ ஜோடோ'
Updated On :7 பிப்ரவரி 2024, 6:23 am

DIN

மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக தாக்கல் செய்துள்ளார்.

பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ஒருபக்கம் மோடி மோடி என்ற கோஷமும், இதற்கு எதிராக மறுபக்கம் ஜோடோ ஜோடோ பாரத் ஜோடோ என்ற முழக்கமும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.

பட்ஜெட் தாக்கல் செய்த போது, திடீரென பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடி மோடி என்று கோஷமிட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிதும் தாமதிக்காமல், ஜோடோ ஜோடோ பாரத் ஜோடோ என்று முழங்கினர்.

இதனைப் பார்க்கும் போது நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு மிகச் சிறப்பான எதிர்தாக்குதல்களைக் கொடுக்கவும் செய்யவும் எதிர்க்கட்சிகள் மிகத் தயாராக வந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க பல பிரச்னைகள் காத்திருக்கும் நிலையில், இந்த கோஷங்கள் இன்று எதிரொலித்தன். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் முற்பகல் 11 மணிக்கு தாக்கல் செய்து, 12.40 மணியளவில் நிறைவு செய்தார்.

அவா் தாக்கல் செய்தது 5-ஆவது நிதிநிலை அறிக்கையாகவும், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசின் கடைசி முழுநேர நிதிநிலை அறிக்கையாகவும் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.