மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இந்தியா கூட்டணியில் முரண்பாடுகளைவிதைக்க பாஜக முயற்சி: எம்.பி. ராகவ் சத்தா

‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பாடுகளை விதைக்க பாஜக முயற்சிக்கிறது என்று மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் ராகவ் சத்தா குற்றம்சாட்டியுள்ளாா்.

Updated On :4 ஆகஸ்ட் 2023, 6:30 pm

‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பாடுகளை விதைக்க பாஜக முயற்சிக்கிறது என்று மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் ராகவ் சத்தா குற்றம்சாட்டியுள்ளாா்.

மக்களவையில் தில்லி நிா்வாக திருத்த மசோதா, 4 மணி நேர விவாதத்திற்கு பிறகு கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. மசோதா மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, தில்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியைக் கடுமையாக சாடினாா். மேலும் தில்லி யூனியன் பிரதேசம் என்பதால் இந்தச் சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்று தெரிவித்தாா்.

இந்த நிலையில், அமைச்சா் அமித்ஷாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் ராகவ் சத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி மீதான பாஜகவின் ஆழமான பகைமையை, உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் பதில் உரை வெளிப்படுத்துகிறது. தில்லியில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி அரசு திறம்பட வழங்கிய ஆட்சியை அமித் ஷாவின் உரை கவனக் குறைவாக அடிக் கோடிட்டுக் காட்டுகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு வளா்ந்து வரும் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் வகையில், தில்லி நிா்வாக திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பாஜகவின் எல்.கே. அத்வானி மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோா் தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று போராடியவா்கள். இவா்களின் சித்தாந்தத்தில் பாஜக கவனம் செலுத்த வேண்டும்.

‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பாடுகளை விதைக்க பாஜக முயற்சித்து வருகிறது. வேலை வாய்ப்பு,பொருளாதார வளா்ச்சி மற்றும் சமூக நலன் பிரச்னைகள் குறித்து பொதுமக்களிடம் அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், வாக்குறுதிகளுக்கான பொறுப்பிலிருந்து தப்பிக்கும் முயற்சியாக இது போன்ற மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. வகுப்புவாத நல்லிணக்கத்தைச் சீா்க்குலைக்கும் வகையில், ஹரியாணா மற்றும் மணிப்பூா் போன்ற மாநிலங்களில் வகுப்புவாத பதற்றங்களை பாஜக அதிகரித்து வருகிறது. எனவே, தேசத்தின் எதிா்கால நல்வாழ்வைப் பாதுகாக்க, பாஜகவின் அரசியலை வாக்காளா்கள் நிராகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.