/

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு நூலாக வெளியிடப்படும்: மத்திய அமைச்சர்

மாபெரும் சாதனைகளைப் படைத்த பழம் பெரும் இசைக் கலைஞரான எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்றை சிறிய நூல்களாக வெளியிடும் திட்டத்தை

News image

நாடாளுமன்றம்

Updated On :2 ஆகஸ்ட் 2023, 2:19 am

மாபெரும் சாதனைகளைப் படைத்த பழம் பெரும் இசைக் கலைஞரான எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்றை சிறிய நூல்களாக வெளியிடும் திட்டத்தை அரசு மேற்கொள்வதாக மத்திய கலாசார, சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தார்.
 புகழ் பெற்ற ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் பீம்சென் ஜோஷியின் வாழ்க்கை வரலாற்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளதா?, தமிழகத்தின் புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்று நூலை மத்திய அரசு வெளியிடுமா என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
 இதற்கு மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி அளித்துள்ள பதிலில், "பீம்சென் ஜோஷி வாழ்க்கை வரலாற்று நூல் அரசால் வெளியிடப்படவில்லை. ஆனால், மாபெரும் சாதனைகள் படைத்த கலைஞர்களின் வாழ்கை வரலாற்றை சிறிய நூல்களாக வெளியிடும் திட்டம் ஒன்றை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
 மேலும், எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்த கேள்விக்கு, "சங்கீத நாடக அகாதெமி விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட இந்திய நிகழ் கலைகளில் (பர்ஃபாமிங் ஆர்ட்ஸ்) புகழ்பெற்ற பல்துறை கலை மேதைகளின் சுயசரிதை, வாழ்க்கை வரலாற்று நூல்கள் வெளியிடப்படும்' எனவும் அமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்துபூர்வமாகப் பதிலளித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.