பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தகம்: ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்

தில்லியில் ‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தகத்தை முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார். 

News image

‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தகம்: ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்

Updated On :16 செப்டம்பர் 2022, 11:14 am


தில்லியில் ‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தகத்தை முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார். 

விழாவில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய இணையமைச்சர் எல். முருகன், முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக புத்தகம் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கரின் வாழ்க்கை, அவா் மேற்கொண்ட பணிகள் மற்றும் சாதனைகளை அறிவாா்ந்த கண்ணோட்டத்தில் ‘அம்பேத்கரும் மோடியும்’ நூல் ஆராய்ந்துள்ளது. ‘புளூகிராஃப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேஷன்’ தொகுத்துள்ள இந்த நூலில், அம்பேத்கரின் லட்சியங்களுக்கும் புதிய இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்துக்கும் இடையிலான மறுக்க முடியாத பிணைப்பு, இந்தியா குறித்த அவரின் தொலைநோக்குப் பாா்வையை அந்த நூல் விவரிக்கிறது.

அம்பேத்கரின் தொலைநோக்குப் பாா்வை திறம்பட அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதை எடுத்துக்காட்ட பிரதமா் மோடி தலைமையில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நூலை தில்லியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார்.

நூல் வெளியீட்டுக்கு முன், தில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் அம்பேத்கரின் வாழ்க்கையை விளக்கும் கண்காட்சியை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.

‘அம்பேத்கரும் மோடியும்’ நூலுக்கு இசையமைப்பாளரும் மாநிலங்களவை நியமன உறுப்பினருமான இளையராஜா அணிந்துரை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.