பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இந்தியா - பூடான் எல்லை நுழைவுவாயில் செப்.23-ல் திறப்பு

கரோனா பேரிடர் காரணமாக மூடப்பட்டிருந்த இந்தியா - பூடான் எல்லை நுழைவு வாயில் செப்டம்பர் 23ஆம் தேதி திறக்கப்படுகிறது.

News image

இந்தியா - பூடான் எல்லை நுழைவுவாயில் செப்.23-ல் திறப்பு

Updated On :15 செப்டம்பர் 2022, 8:10 am


கோக்ரஜார்: கரோனா பேரிடர் காரணமாக மூடப்பட்டிருந்த இந்தியா - பூடான் எல்லை நுழைவு வாயில் செப்டம்பர் 23ஆம் தேதி திறக்கப்படுகிறது.

இந்தியா - பூடான் எல்லையின் நுழைவு வாயிலான அசாம் மாநிலத்தில் உள்ள சம்ரப் ஜோங்கர் மற்றும் கெலேபு நுழைவு வாயில்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவிருக்கிறது.

இது தொடர்பாக இரு தரப்பினரும் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக, சுமார் இரண்டரை ஆண்டுகாலமாக மூடப்பட்டிருக்கும் எல்லை நுழைவு வாயில் திறப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கரோனா பேரிடர் தற்போது குறைந்து, நிலைமை மேம்பட்டுள்ளதால், வணிகம், வர்த்தகம் மற்றும் அதிகாரப்பூர்வ பயணங்கள் உள்ளிட்டவற்றுக்காக எல்லை நுழைவுவாயில் திறக்கப்படுவதாக பூடா அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள், பூடான் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் வந்து சுற்றிப் பார்க்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக சுற்றுலாப் பயணிகளுக்கு ஐந்து நுழைவு வாயில்கள் வழியாக அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்காக பல்வேறு சிறப்பம்சங்களையும் அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.