2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இளைஞர்களிடையே அரசியலமைப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி

இளைஞர்களிடையே அரசியலமைப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன தின விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார். 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:50 pm

DIN

இளைஞர்களிடையே அரசியலமைப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன தின விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார். 

அரசியல் சாசனம் நாடாளுமன்றத்தால் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பா் 26-ஆம் தேதி கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அரசியல் சாசன தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நாளையொட்டி உச்சநீதிமன்றத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு விழாவை தொடக்கிவைத்தார். மேலும், மெய்நிகா் நீதி கடிகாரம், ‘ஜஸ்ட் ஐஎஸ்’ கைப்பேசி செயலி 2.0, எண்ம (டிஜிட்டல்) நீதிமன்றம், ‘எஸ்3வாஸ்’ வலைதளம் ஆகிய நீதித்துறை தொடர்பான சேவைகளை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். 

இந்த விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு மற்றும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். 

Story image

விழாவில் பேசிய பிரதமர் மோடி, 'இந்திய அரசியலமைப்புச் சட்டம் இளைஞர்களை மையமாகக் கொண்டது. இளைஞர்களிடையே அரசியலமைப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு நிறுவனங்கள் மற்றும் நீதித்துறை முயற்சி மேற்கொள்ள வேண்டும். அரசியல் சாசனம் தொடர்பான விவாதங்களில் நாட்டின் இளைஞர்கள் அதிகமாக பங்கேற்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். 

மேலும், 'இந்தியாவின் பலமே அரசியலமைப்புதான். நம் அரசியலமைப்பு சாசனம் திறந்த, எதிர்காலம் குறித்த முற்போக்கான நடவடிக்கைகளை உள்ளடக்கியது. 

Story image

இன்றைய உலகளாவிய சூழ்நிலையில், ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவையே நோக்கியுள்ளது. இந்தியாவின் விரைவான வளர்ச்சி, அதன் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு மத்தியில், உலகம் நம்மை பெரும் எதிர்பார்ப்புகளுடன் பார்க்கிறது' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.