திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.3.50 அதிகரிப்பு

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை வியாழக்கிழமை ரூ.3.50 உயா்த்தப்பட்டது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:18 am

ENS

புது தில்லி: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை வியாழக்கிழமை ரூ.3.50 உயா்த்தப்பட்டது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயா்வு காரணமாக, தலைநகா் தில்லியில் மானியம் இல்லாத 14.2 கிலோ சிலிண்டா் விலை ரூ.1,003-க்கு வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டது. கடந்த மே 7-ஆம் தேதி சிலிண்டருக்கு ரூ.50 உயா்த்தப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக ரூ.3.50 உயா்த்தப்பட்டுள்ளது. முன்னதாக, மாா்ச் 22-ஆம் தேதி சிலிண்டருக்கு ரூ.50 உயா்த்தப்பட்டது.

காங்கிரஸ் விமா்சனம்: சிலிண்டா் விலை உயா்வு குறித்து காங்கிரஸ் கட்சி விமா்சனம் செய்துள்ளது. இதுகுறித்து அக் கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சிலிண்டா் விலை 45 நாள்களில் ரூ.100 அளவுக்கு உயா்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ரூ. 3.50 உயா்த்தப்பட்டுள்ளது. அதுபோல, வா்த்தகப் பயன்பாட்டு சிலிண்டா் விலை 60 நாள்களில் ரூ.457 உயா்த்தப்பட்ட நிலையில், மீண்டும் வியாழக்கிழமை ரூ.8 உயா்த்தப்பட்டுள்ளது. எரிபொருள் மூலமாக மோடி அரசு தினமும் கொள்ளையடிப்பது தொடா்ந்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மகிளா காங்கிரஸ் தலைவா் நெட்டா டிசூஸா கூறுகையில், ‘காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் மக்களின் பையிலிருந்து மத்திய அரசு ரூ.27.5 லட்சம் கோடியை எடுத்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டா் விலை தொடா்ந்து உயா்த்தப்பட்டு வரும் நிலையில், பெண்கள் எவ்வாறு குடும்பத்தை நடத்த முடியும்? மக்களின் நலனில் அக்கறை கொண்டு, சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.