தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மலைப்பாம்பு முட்டைகளால் நின்றுபோன நெடுஞ்சாலைப் பணி: அடடா!

மலைப்பாம்பின் 24 முட்டைகளும் குஞ்சுபொரிப்பதற்காக ஒன்றல்ல..இரண்டல்ல 54 நாள்கள் நிறுத்தப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

மலைப் பாம்பு முட்டைகளால் நின்றுபோன நெடுஞ்சாலைப் பணி: அடடா!

Updated On :16 மே 2022, 12:32 pm

காசர்கோடு: காசர்கோடு பகுதியில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலையை நான்கு வழிப் பாதையாக விரிவாக்கும் பணிகள், மலைப்பாம்பின் 24 முட்டைகளும் குஞ்சுபொரிப்பதற்காக ஒன்றல்ல.. இரண்டல்ல 54 நாள்கள் நிறுத்தப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநில வனத்துறை, நெடுஞ்சாலை ஒப்பந்ததார நிறுவனம், பாம்பு மீட்பர்கள் இணைந்து, மலைப் பாம்பின் 24 முட்டைகளும் நல்ல முறையில் குஞ்சு பொரித்து அனைத்து மலைப்பாம்பு குட்டிகளும் இந்த உலகைக் காண வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

24 முட்டைகளும் பொரிக்கப்பட்டு, 15 குட்டிகள் நேற்று வனப்பகுதிக்குள் விடப்பட்டன. மற்றவை இன்று இரவு விடப்படும் என்கிறார் பாம்பு மீட்பர் அமீன்.

மார்ச் 20ஆம் தேதி நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக பூமியை செப்பனிட்டபோது ஒரு பொந்து காணப்பட்டது. அதற்குள் மலைப்பாம்பு சுருண்டு கிடந்ததைக் கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில் பாம்பு முட்டைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக வனத்துறையினர் அமீனை வரவழைத்தனர். அவர் நிலைமைப் பார்த்து, அங்கு நெடுஞ்சாலைப் பணிகளை நிறுத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டு அனுமதி கிடைக்கப்பெற்றது.

நாட்டின் புலிகளுக்கு இணையான வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மலைப்பாம்புகளும் வருவதால் இந்த நடவடிக்கை எளிதாக அமைந்தது.

அமீன் அந்த பொந்தை சோதனை செய்ததில், அதில் ஏராளமான முட்டைகளும், அதனை சுற்றிவளைத்தபடி மலைம்பாம்பு  இருந்ததும் தெரிய வந்தது. இது பற்றி வனவிலங்குகள் ஆராய்ச்சியாளர் மாவீஷை தொடர்பு கொண்டு அமீன் பேசினார்.

அவர் அளித்த அறிவுரைப்படி, பாம்பு முட்டைகளை அங்கிருந்து அகற்றி வேறு இடத்தில் குஞ்சுபொரிக்க வைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. முட்டைகளுக்கு 27 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையே தேவை. இது மாறினால் குஞ்சுகள் பொரிக்காது. அதனால்தான் பாம்பு அதனை சுற்றி வைத்துக் கொண்டு வெப்பநிலையை தக்க வைக்கிறது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அங்கேயே பாம்பும் முட்டைகளும் விடப்பட்டு இரண்டு நாள்களுக்கு ஒரு முறை அமீன் அந்த பொந்தை பரிசோதித்து வந்தார்.

பொதுவாக ஒரு மலைப்பாம்பு முட்டை 60 - 65 நாள்களில் பொரியும். பாம்பு பொந்து கண்டறியப்பட்ட 54வது நாளில் முட்டைகள் பொரியத் தொடங்கின. முட்டையின் ஓடுகளில் விரிசல்கள் விட ஆரம்பித்தன. இதன் மூலம் பாம்பு முட்டையிட்டு ஒரு வார காலத்துக்குப் பின் அதனை நாங்கள் கண்டறிந்தது தெரிய வந்தது. 

உடனடியாக அந்த 3 அடி ஆழமுள்ள பொந்துக்குள் அமீன் தவழ்ந்து சென்று முட்டைகளை மீட்டு வந்தார். அப்போது, மற்றொரு பொந்தில் அந்த தாய் மலைப்பாம்பு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. என்னைப் பார்த்தும் கூட அது என்னைத்தாக்கவில்லை. அத்தனை முட்டைகளையும் அமீன் தனது வீட்டுக்கு எடுத்து வந்து அதனை பத்திரப்படுத்தி, அனைத்து முட்டைகளும் பொரிந்துவிட்டதாகவும், இது மிகவும் அரிதான நிகழ்வு என்றும் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.