சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இந்தியாவுக்குள் நுழைந்த எக்ஸ்இ வகை கரோனா: ஆனால்..

ஒமைக்ரான் வகை கரோனாவின் உருமாறிய எக்ஸ்இ வகை கரோனா வைரஸ் நுழைந்துவிட்டதை ஐஎன்எஸ்ஏசிஓஜி எனப்படும் இந்தியன் சார்ஸ்-கோவ்2 ஜெனோமிக்ஸ் கன்சோர்டியம் ஆய்வகங்களின் கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது.

News image
இந்தியாவுக்குள் நுழைந்த எக்ஸ்இ வகை கரோனா: ஆனால்..
Updated On :1 பிப்ரவரி 2024, 9:09 am

ENS


புது தில்லி: இந்தியாவுக்குள், ஒமைக்ரான் வகை கரோனாவின் உருமாறிய எக்ஸ்இ வகை கரோனா வைரஸ் நுழைந்துவிட்டதை ஐஎன்எஸ்ஏசிஓஜி எனப்படும் இந்தியன் சார்ஸ்-கோவ்2 ஜெனோமிக்ஸ் கன்சோர்டியம் ஆய்வகங்களின் கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது.

குஜராத், கேரளம், மகாராஷ்டிர மாநிலங்களில் ஒமைக்ரான் வகை கரோனவின் பல மடங்கு உருமாறிய பிஏ.1 மற்றும் பிஏ.2 வகை ஒமைக்ரான் தொற்றுகள் பரவியிருப்பது ஆய்வகப் பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, ஒமைக்ரான் எக்ஸ்இ வகை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து மத்திய சுகாதாரத் துறை இதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

ஏப்ரல் 25ஆம் தேதி நாளிட்டு, ஐஎன்எஸ்ஏசிஓஜி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்தியாவில் ஒரு எக்ஸ்இ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், எந்த மாநிலத்தில் அது உறுதி செய்யப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

இன்றைய தேதிப்படி, இந்தியாவில் ஒமைக்ரான் பிஏ.2 தான் மிக அதிக வேகத்துடன் பரவும் வைரஸாக உள்ளது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் திடீரென கரோனா அதிகரிக்கவும் இந்த வகை வைரஸ்தான் காரணமாகக் கூறப்பட்டது.

இதுவரை பிஏ2.10 முதல் பிஏ.2.12 வரை ஒமைக்ரான் தீநுண்மியின் மரபணு வரிசைமுறைகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை, இந்த வகை வைரஸ்கள், கரோனா தீவிரமடையக் காரணமாக அமையவில்லை என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஒமைக்ரான் எக்ஸ்இ வகை கரோனா கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தென்னாப்ரிக்காவிலிருந்து வந்த 50 வயது ஆடை வடிவமைப்பாளருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகத் தெரவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எக்ஸ்இ வகை கரோனா இந்தியாவில் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை உடனடியாக மறுப்புத் தெரிவித்திருந்தது.

இதற்கு 3 நாள்களுக்குப் பிறகு குஜராத்திலும் எக்ஸ்இ வகை கரோனா உறுதி செய்யப்பட்டது. கேரளத்திலும் ஏப்ரல் 22ஆம் தேதி இதே வகை கரோனா கண்டறியப்பட்ட நிலையில், இறுதியாக இந்தியாவுக்குள் ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை கரோனா நுழைந்துவிட்டதை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

எனினும், இது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தாது என்பது மட்டும் இதுவரை நடந்த ஆய்வுகளில் தெரிய வந்திருப்பது சற்று ஆறுதலைத் தருவதாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.