காத்மாண்டு: காங்கிரஸ் கட்சி தேய்ந்து கொண்டிருக்கும்போது நேபாளத்தில் இரவுக் கேளிக்கை விடுதியில் ராகுல் காந்தி பொழுதைக் கழித்ததாக பாஜக கடுமையான விமரிசனத்தை முன்வைத்திருந்த நிலையில், காத்மாண்டு எல்லைப் பகுதியிலிருக்கும் வேறு விடுதிக்கு இடம்மாறினார்.
நேபாளத்தைச் சேர்ந்த தனது நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை மாலை காத்மாண்டுக்கு வந்த ராகுல், காத்மாண்டுவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். திருமணம் முடிந்ததும் கேளிக்கை விடுதியில் நடைபெற்ற விருந்திலும் பங்கேற்றார். அங்கே எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து சர்ச்சை உருவானது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஐந்து நாள் தனிப்பட்ட பயணமாக திங்கள்கிழமை நேபாள நாட்டுக்குச் சென்றார். இந்நிலையில், பாஜகவின் சமூக ஊடகப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் "கடந்த 2008-இல் மும்பை நகரை பயங்கரவாதிகள் தாக்கிக் கொண்டிருந்தபோது ராகுல் காந்தி இரவுக் கேளிக்கை விடுதியில் இருந்தார். அவரது கட்சி தேய்ந்து கொண்டிருக்கும்போது அவர் இரவுக் கேளிக்கை விடுதியில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்' என்று அமித் மாளவியா தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:
ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி நேபாளத்துக்கு சென்றுள்ளார். யாரும் அழைக்காமல் அவர் அங்கு செல்லவில்லை. ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரின் திருமணத்தில் பங்கேற்பது குற்றமில்லை.
பிரதமர் நரேந்திர மோடி அழையா விருந்தாளியாக பாகிஸ்தானுக்குச் சென்று, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பிறந்த நாளைக் கொண்டாடி கேக் வெட்டியதைப் போல ராகுல் செல்லவில்லை. ஊடகவியலாளரான தனது நண்பரின் திருமணத்தில் பங்கேற்கவே ராகுல் நேபாளம் சென்றுள்ளார்.
குடும்பத்தையும் நண்பர்களையும் கொண்டிருப்பதும், திருமணம் மற்றும் நிச்சயதார்த்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் நமது நாட்டின் கலாசாரமும் நாகரிகமும் ஆகும். திருமணம் செய்து கொள்வதும் சிலருடன் நண்பராக இருப்பதும் அல்லது அவர்களின் திருமணக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதும் குற்றமில்லை. திருமணத்தில் பங்கேற்பது சட்ட விரோதம் என்று பிரதமர் மோடி அல்லது பாஜக ஒருவேளை முடிவு செய்யலாம். நண்பர்களைக் கொண்டிருப்பதும் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் ஒரு குற்றம் என்று அவர்கள் கூறக் கூடும் என்று சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மும்பைக்கு எதிராக சதமடித்த முதல் சிஎஸ்கே வீரர்..! சஞ்சு சாம்சன் நிகழ்த்திய பல சாதனைகள்!
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!

நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில் தயாரிக்கப்படும் தேர்தல் மை! அழிக்க முடியாதது ஏன்?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


