டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தில்லியில் மாபெரும் சந்தைத் திருவிழா: அறிவித்தார் கேஜரிவால்

வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், புது தில்லியில் வரும் ஜனவரி மாதத்தில் மாபெரும் சந்தைத் திருவிழா நடைபெறும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

News image
தில்லியில் மாபெரும் சந்தைத் திருவிழா: அறிவித்தார் கேஜரிவால்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:43 am

ANI


புது தில்லி: வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், புது தில்லியில் வரும் ஜனவரி மாதத்தில் மாபெரும் சந்தைத் திருவிழா நடைபெறும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

தில்லி மாநகராட்சியே ஒட்டுமொத்தமாக திருவிழாக் கோலம் பூணும் வகையில் வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை மாபெரும் சந்தைத் திருவிழா 30 நாள்கள் நடைபெறும் என்று தில்லி முதல்வர் அறிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கேஜரிவால், மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், ஜனவரி மாதம் தொடங்கும் இந்த சந்தைத் திருவிழா, வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவற்றுக்கு பெரும் ஊக்கமளிக்கும். பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிற நாடுகளிலிருந்தும், தில்லியில் நடைபெறும் மாபெரும் சந்தைத் திருவிழாவுக்கு வரத் தயாராகுங்கள். தில்லி மற்றும் அதன் கலாசாரத்தை அறிந்துகொள்ள தயாராகுங்கள் என்றும் கூறினார்.

தொடர்ந்து, ஈடு இணையற்ற சந்தைத் திருவிழாவாக இது அமையும். பல சிறப்புத் தள்ளுபடிகளும் அறிவிக்கப்படும். ஒட்டுமொத்த தில்லியும் விழாக்கோலம் பூணும். சிறப்புக் கண்காட்சிகளும் நடத்தப்படும். 

நாம் இப்போது இதைத் தொடங்கவுள்ளோம். இன்னும் ஒரு சில ஆண்டுகளில், உலகிலேயே மிகப்பெரிய சந்தை திருவிழாவாக இது மாறும் என்று நம்பிக்கை இருப்பதாகவும் முதல்வர் கேஜரிவால் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.