சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தில்லியில் பிப்.7 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகளை பிப்ரவரி 7ஆம் தேதி திறக்க தில்லி பேரிடர் மேலாண்மைக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

News image

தில்லியில் பிப்.7 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

Updated On :4 பிப்ரவரி 2022, 7:42 am


புது தில்லி : கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகளை பிப்ரவரி 7ஆம் தேதி திறக்க தில்லி பேரிடர் மேலாண்மைக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

புது தில்லியில் இன்று தில்லி பேரிடர் மேலாண்மைக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், முதல்கட்டமாக 9 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்கவும், மற்ற வகுப்புகளுக்கு ஆன்லைன் முறையிலேயே வகுப்புகளைத் தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தில்லியில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இரவு நேர ஊரடங்கு உத்தரவும் ரத்து செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

அனைத்து ஆசிரியர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படவும், உடற்பயிற்சிக் கூடங்கள், அழகுநிலையங்கள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.