சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

34 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் முதல் முறையாக 4 பெண் நீதிபதிகள்

நாட்டில் முதல் முறையாக, 34 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 4 பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள் என்று மாநிலங்களவையில் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :3 பிப்ரவரி 2022, 12:27 pm


புது தில்லி: நாட்டில் முதல் முறையாக, 34 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 4 பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள் என்று மாநிலங்களவையில் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கும் 4 பெண் நீதிபதிகளில், மூன்று பேர் தான் சட்டத் துறை அமைச்சரர்க பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நியமிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் மொத்தமுள்ள 1,098 நீதிபதிகளில், 83 பெண் நீதிபதிகள் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இருக்க வேண்டிய மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை, தற்போதிருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை மற்றும் அதில் எத்தனை பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு இந்தத் தகவலை அளித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.