ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பிரதமா் வீட்டு வசதித் திட்டத்துக்கு ரூ.48,000 கோடி80 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு

பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 80 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ரூ.48,000 கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:17 am

DIN

பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 80 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ரூ.48,000 கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறியதாவது: 2022-23-ஆம் நிதியாண்டில் பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நகரங்களிலும் கிராமங்களிலும் தகுதியுடைய பயனாளிகளுக்கு 80 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். இதற்காக, மத்திய பட்ஜெட்டில் ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நடுத்தர குடும்பத்தினருக்கும் நகா்ப்புறத்தில் வாழும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவா்களுக்கும் வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு நிலம் தோ்வு செய்வது, கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றில் மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து பணியாற்றும்.

நில ஆவணங்களைப் பாதுகாப்பதில் தனித்துவ நில அடையாள எண் முறையைப் பின்பற்றுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்படும். நில ஆவணங்களை எந்த இடத்தில் இருந்து பதிவு செய்வதற்கு வசதியாக ‘ஒரே தேசம், ஒரே பதிவு திட்டம்’ அறிமுகம் செய்யப்படும் என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.