எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விபத்தில் சிக்கிய ரிஷப் பந்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்: புஷ்கர் தாமி

கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளும் அவருக்கு வழங்கப்படும் என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உறுதியளித்துள்ளார். 

News image
விபத்தில் சிக்கிய ரிஷப் பந்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்: புஷ்கர் தாமி
Updated On :1 பிப்ரவரி 2024, 11:13 am

ANI

கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளும் அவருக்கு வழங்கப்படும் என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உறுதியளித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிஷப் பந்த், தில்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகண்டிற்கு சென்று கொண்டிருந்தார். கார் வெள்ளிக்கிழமை அதிகாலை ஹம்மத்பூர் ஜால் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. 

இதில், கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்திற்கு முதுகு மற்றும் தலையில் பலத்த காயம் எற்பட்டது. படுகாயங்களுடன் ரிஷப் பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் தாமி காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தேவைப்பட்டால் ஏர் ஆம்புலன்ஸ் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.