வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பெங்களூருவில் ஜி20 நிதிசார் கூட்டம் தொடங்கியது!

பெங்களூரில் மூன்று நாள்கள் நடைபெறும் ஜி20 நாடுகளின் முதலாவது நிதிசாா் கூட்டம் இன்று தொடங்கியது. 

News image

பெங்களூருவில் ஜி20 நிதிசார் கூட்டம் தொடங்கியது!

Updated On :13 டிசம்பர் 2022, 6:59 am

பெங்களூரில் மூன்று நாள்கள் நடைபெறும் ஜி20 நாடுகளின் முதலாவது நிதிசாா் கூட்டம் இன்று தொடங்கியது. 

ஜி20 நாடுகளின் மாநாடு இந்தியாவின் தலைமையின்கீழ் நடக்கவிருக்கிறது. அதன் தொடக்கமாக, பெங்களூரில் இன்று முதல் நிதி வழிமுறை குறித்த ஜி20 நாடுகளின் நிதி மற்றும் வங்கிப் பிரதிநிதிகளின் முதலாவது கூட்டம் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தை மத்திய நிதித்துறையும், ரிசா்வ் வங்கியும் இணைந்து நடத்துகின்றன.

ஜி20 நாடுகளின் பொருளாதாரம், நிதிசாா் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. உலக அளவிலான பொருளாதார கலந்தாய்வு, கொள்கை வகுப்பின் ஒருங்கிணைப்புக்கு இக்கூட்டம் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தக் கூட்டத்திற்கு மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளா் அஜய் சேத்தும் ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநா் மைக்கேல் டிபத்ராவும் தலைமை வகித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், பன்னாட்டு அழைப்பாளா்கள் கலந்துகொள்கிறாா்கள்.

இந்தக் கூட்டத்தில் உலக பொருளாதார கண்ணோட்டம், சா்வதேச நிதி கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிதியுதவி, நிலையான நிதி, உலகளாவிய சுகாதாரம், சா்வதேச வரிவிதிப்பு, நிதிசோ்க்கை உள்ளிட்ட நிதித்துறை சாா்ந்த விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. 

21ஆம் நூற்றாண்டின் உலகளாவிய சவால்களை எதிா்கொள்ள பலதரப்பு வளா்ச்சி வங்கிகளை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் குழுவிவாதம் நடக்கவிருக்கிறது. பசுமை நிதியளிப்பில் மத்தியவங்கிகளின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடக்கவிருக்கிறது.

ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவிருக்கும் நிதி வழிமுறை தொடா்பான 40 கூட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கவிருக்கின்றன. இதில் நிதி அமைச்சா்கள், ரிசா்வ் வங்கி ஆளுநா்கள் பங்கேற்கும் கூட்டமும் அடக்கம். ஜி20 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சா்கள், மத்திய வங்கி ஆளுநா்கள் கலந்துகொள்ளும் முதல் கூட்டம் அடுத்த ஆண்டு பிப். 23 முதல் 25ஆம் தேதி வரை பெங்களூரில் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.