கோட்டா: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போத, காங்கிரஸ் தொண்டரின் வீட்டில் ராகுல் தேநீர் அருந்தினார்.
கோட்டாவில் ஒற்றுமை நடைப்பயணம் சென்று கொண்டிருந்த நிலையில், ஒரு காங்கிரஸ் தொண்டர் வீட்டில் ராகுல் காந்தி தேநீர் அருந்தினார். இதனால், நடைப்பயணம் அங்கே 35 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
இதையும் படிக்க.. நாடகம் பார்த்த குற்றத்துக்காக 2 சிறார்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இதுவரை 2,400 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்துள்ளது. இன்று காலை 6 மணிக்கு நடைப்பயணம் தொடங்கியது. ராகுலுடன் பல்வேறு நடனக் கலைஞர்கள் நடைப்பயணத்தில் கலந்து கொண்டனர்.
கிராம மக்கள் சாலையின் இருபுறத்திலும் நின்று கொண்டு ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைப்பயணம் சென்று கொண்டிருந்த நிலையில், அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர் இல்லத்துக்குச் சென்ற ராகுல் தேநீர் அருந்தினார்.
காங்கிரஸ் தொண்டர் மீனாவின் இல்லத்துக்குச் சென்ற ராகுல் அங்கு அவர் அளித்த பனைவெல்ல தேநீரை அருந்தினார். அவர் அதனை விரும்பு வேண்டிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பனைவெல்ல தேநீர் அவருக்கு வழங்கியதாவும், அவர் அந்த தேநீரை ருசித்துக் குடித்ததாகவும் மீனா கூறினார்.
ராகுல் கலந்தியுடன் முதல்வர் அசோக் கெலாட்டும் தேநீர் அருந்தினர். இருவரும் தேநீரின் சுவை அலாதியாக இருந்ததாகத் தங்களது பாராட்டுகளைவும் தெரிவித்துக் கொண்டனர்.
அப்போது, அங்கிருந்த விவசாயிகள், இங்கு தண்ணீர் பிரச்னை இருப்பதாகவும் கால்வாய் அமைத்தால் பிரச்னை சரியாகும் என்றும் கோரிக்கை வைத்தனர். உடனடியாக அதனை சரி செய்யுமாறு ராகுல், அசோக் கெலாட்டைக் கேட்டுக் கொண்டார்.
பறக்கும் முத்தம் அளித்த ராகுல்!
நேற்று இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பிரதமா் நரேந்திர மோடியை வாழ்த்தி முழக்கமிட்டவா்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தவாறும், அவா்களை நோக்கி கையசைத்தவாறும் ராகுல் காந்தி கடந்து சென்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu

அடுத்த ஒரு வாரத்திற்கு.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?

தேசிய தகவல் தொடர்பு மையத்தில் விஞ்ஞானி பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

விரதம் இருக்கும் அம்மன்
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


