தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஒற்றுமை நடைப்பயணம்: காங்கிரஸ் தொண்டர் வீட்டில் தேநீர் அருந்திய ராகுல்

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போத, காங்கிரஸ் தொண்டரின் வீட்டில் ராகுல் தேநீர் அருந்தினார்.

News image

ஒற்றுமை நடைப்பயணம்: காங்கிரஸ் தொண்டர் வீட்டில் தேநீர் அருந்திய ராகுல்

Updated On :7 டிசம்பர் 2022, 11:14 am

கோட்டா: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போத, காங்கிரஸ் தொண்டரின் வீட்டில் ராகுல் தேநீர் அருந்தினார்.

கோட்டாவில் ஒற்றுமை நடைப்பயணம் சென்று கொண்டிருந்த நிலையில், ஒரு காங்கிரஸ் தொண்டர் வீட்டில் ராகுல் காந்தி தேநீர் அருந்தினார். இதனால், நடைப்பயணம் அங்கே 35 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.

செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இதுவரை 2,400 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்துள்ளது. இன்று காலை 6 மணிக்கு நடைப்பயணம் தொடங்கியது. ராகுலுடன் பல்வேறு நடனக் கலைஞர்கள் நடைப்பயணத்தில் கலந்து கொண்டனர்.

கிராம மக்கள் சாலையின் இருபுறத்திலும் நின்று கொண்டு ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைப்பயணம் சென்று கொண்டிருந்த நிலையில், அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர் இல்லத்துக்குச் சென்ற ராகுல் தேநீர் அருந்தினார்.

காங்கிரஸ் தொண்டர் மீனாவின் இல்லத்துக்குச் சென்ற ராகுல் அங்கு அவர் அளித்த பனைவெல்ல தேநீரை அருந்தினார். அவர் அதனை விரும்பு வேண்டிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பனைவெல்ல தேநீர் அவருக்கு வழங்கியதாவும், அவர் அந்த தேநீரை ருசித்துக் குடித்ததாகவும் மீனா கூறினார்.

ராகுல் கலந்தியுடன் முதல்வர் அசோக் கெலாட்டும் தேநீர் அருந்தினர். இருவரும் தேநீரின் சுவை அலாதியாக இருந்ததாகத் தங்களது பாராட்டுகளைவும் தெரிவித்துக் கொண்டனர்.

அப்போது, அங்கிருந்த விவசாயிகள், இங்கு தண்ணீர் பிரச்னை இருப்பதாகவும் கால்வாய் அமைத்தால் பிரச்னை சரியாகும் என்றும் கோரிக்கை வைத்தனர். உடனடியாக அதனை சரி செய்யுமாறு ராகுல், அசோக் கெலாட்டைக் கேட்டுக் கொண்டார்.

பறக்கும் முத்தம் அளித்த ராகுல்!

நேற்று இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பிரதமா் நரேந்திர மோடியை வாழ்த்தி முழக்கமிட்டவா்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தவாறும், அவா்களை நோக்கி கையசைத்தவாறும் ராகுல் காந்தி கடந்து சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.