தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நிறைமாத கர்ப்பிணிக்கு பேருந்திலேயே பிரசவம்

சொந்த கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணிக்கு பேருந்திலேயே பிரசவம் ஆனது. அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

News image

நிறைமாத கர்ப்பிணிக்கு பேருந்திலேயே பிரசவம்

Updated On :5 டிசம்பர் 2022, 1:04 pm


புலந்த்ஷஹர்: புது தில்லியிலிருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணிக்கு பேருந்திலேயே பிரசவம் ஆனது. அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

புது தில்லியிலிருந்து உத்தரப்பிரதேச மாநிலம் கன்னௌஜ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்ததாகவும், வழியில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும், மருத்துவமனைக்குச் செல்வதற்குள் பேருந்துக்குள்ளேயே அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்துவிட்டதாகவும் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து பெண்ணின் கணவர் சோமேஷ் குமார் கூறுகையில், எங்கள் சொந்த கிராமத்துக்குச் சென்று கொண்டிருக்கும் போது பிரசவ வலி ஏற்பட்டுவிட்டது. வலி கடுமையானதைத் தொடர்ந்து பேருந்தை ஓட்டுநர் சாலையோரமாக நிறுத்தினார். பேருந்திலேயே குழந்தை பிறந்துவிட்டது. உடனடியாக பேருந்திலேயே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு குழந்தையையும் தாயையும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம். இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.