2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மழையால் பாதிக்கப்பட்ட கரௌலியில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார் கெலாட்!

ராஜஸ்தானில் கனமழையால் பாதிக்கப்பட்ட கரௌலி மாவட்டத்தை வான்வழி ஆய்வு மேற்கொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேச உள்ளார் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்.  

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:10 am

PTI

ராஜஸ்தானில் கனமழையால் பாதிக்கப்பட்ட கரௌலி மாவட்டத்தை வான்வழி ஆய்வு மேற்கொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேச உள்ளார் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்.  

கடந்த சில நாள்களாக இடைவிடாத பெய்த கனமழை காரணமாக ஆறுகள் நிரம்பியுள்ளது. அணைகள்  திறக்கப்பட்டுள்ளதால் கோட்டா, ஜாலவார், பூண்டி, பரான், தோல்பூர் மற்றும் கரௌலி ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

வான்வழி ஆய்வு நடத்திய பிறகு, கெலாட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வார் என்றும் மந்த்ராயலில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பார் என்றும் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

கெலாட் வெள்ளிக்கிழமை மந்த்ராயலுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார், ஆனால் மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

கெலாட் வெள்ளிக்கிழமை தோல்பூரிலும்,  பூண்டி, கோட்டா மற்றும் பரான் மாவட்டங்களில் வியாழக்கிழமையும் வான்வழி ஆய்வு நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.