பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அன்னை தெரசாவின் பிறந்தநாள்: நினைவிடத்தில் பிரார்த்தனை

அன்னை தெரசாவின் அறக்கட்டளை மற்றும் அமைப்புகளில் சிறப்பு வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன.

News image

அன்னை தெரசாவின் பிறந்தநாள்: நினைவிடத்தில் பிரார்த்தனை

Updated On :26 ஆகஸ்ட் 2022, 9:05 am


கொல்கத்தா: அன்னை தெரசாவின் 112வது பிறந்தநாளை முன்னிட்டு, கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரசாவின் அறக்கட்டளை மற்றும் அமைப்புகளில் சிறப்பு வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன.

கொல்கத்தாவில் உள்ள அன்னை இல்லத்தில், அன்னை தெரசாவின் நினைவிடத்தின் முன்பு, ஏராளமான கன்னியாஸ்திரிகள் பாடல்களைப்பாடி சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Story image

பேராயர் தாமஸ் டிசோசா கூறுகையில், அன்னை தெரசா குறித்து போப் பிரான்சிஸ் இவ்வாறு குறிப்பிட்டார், அதாவது ஆறுகள் தனது நதிநீரை குடிப்பதில்லை, மரங்கள் தங்களது கனிகளை உண்பதில்லை, சூரியன் தனக்கே வெளிச்சம் கொடுப்பதில்லை, பூக்கள் தங்களுக்கு மட்டும் நறுமணத்தை வீசுவதில்லை, மற்றவர்களுக்காக வாழ்வதே இயற்கையின் நியதி. அதுபோலவே வாழ்ந்தவர் அன்னை தெரசா. ஏழைகளைக் காக்கவும், ஏழை மக்களின் வாழ்க்கை உயர வேண்டும் என்றே அவர் வாழ்ந்தார் என்று கூறியிருந்ததை இன்று அவர்  நினைவுகூர்ந்தனர்.

Story image

ஸ்பெயினிலிருந்து வந்திருக்கும் ஜேம்ஸ் பேசுகையில், அன்னை தெரசாவின் பிறந்தநாளை இங்குக் கொண்டாடுவதில் பெரும் மகிழ்ச்சி. எனது குழந்தைப் பருவம் முதல் அவரை பின்பற்றி வருகிறேன் என்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.