2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ராஜஸ்தானில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் கெலாட்

ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் மற்றும் கரௌலி மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் அசோக் கெலாட் வெள்ளிக்கிழமை வான்வழி ஆய்வு நடத்துகிறார். 

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:09 am

PTI

ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் மற்றும் கரௌலி மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் அசோக் கெலாட் வெள்ளிக்கிழமை வான்வழி ஆய்வு நடத்துகிறார். 

மேலும் தோல்பூரில் உள்ள ராஜ்கெடா மற்றும் கரௌலியில் உள்ள மந்த்ராயலில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் சந்திக்க உள்ளார். 

கனமழையால் பாதிக்கப்பட்ட பூண்டி, கோட்டா மற்றும் பாரான் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கெலாட் வியாழக்கிழமை வான்வழி ஆய்வு நடத்தினார். 

பயிர்கள், விலங்குகள் மற்றும் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை விரைவாக மதிப்பிடுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 

பலத்த மழை பெய்து வருவதாலும், ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும், அணைகள் திறக்கப்பட்டதாலும் கோட்டா கோட்டத்தில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கனமழையால் கோட்டா, ஜலவர் மற்றும் பூண்டி மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்திய விமானப்படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சுமார் 5,000 பேரைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளனர்.

அடுத்த 4-5 நாள்களுக்கு மாநிலத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மட்டுமே லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.