2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நான் எதுவும் ஆக விரும்பவில்லை: நிதீஷ் குமார்

எனக்கு எதுவும் ஆக விருப்பமில்லை என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.

News image
நான் எதுவும் ஆக விரும்பவில்லை: நிதீஷ் குமார்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:09 am

PTI


பாட்னா: எனக்கு பிரதமர் பதவி மீது விருப்பம் இருப்பதாக ஊகங்களை ஏற்படுத்தியிருக்கிறது முந்தைய பாஜக கூட்டணி. ஆனால், எனக்கு எதுவும் ஆக விருப்பமில்லை என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.

பிகார் சட்டப்பேரவையில் இன்று தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் நிதீஷ் குமார். இதனை முன்னிட்டு இரண்டு நாள் சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. 

பிகார் சட்டப்பேரவையில் பேசிய நிதீஷ் குமார், நான் ஏதோ ஆக வேண்டும் என்று நினைப்பதாக எண்ணி, ஊகங்களின் அடிப்படையில் என்னை கூட்டணியிலிருந்து வெளியேற்றினார்கள். ஆனால், எனக்கு எதுவும் ஆக விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, நான் முதல்வராக தயாராகவில்லை. பாஜகவிடம் நான் அப்போதே கூறினேன். நீங்கள்தான் அதிக தொகுதிகளில் வென்றுள்ளீர்கள். உங்கள் கட்சியிலிருந்து தான் முதல்வர் பதவி வகிக்க வேண்டும். ஆனால், நான்தான் முதல்வராக வேண்டும் என்று எனக்குக் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. இறுதியில் நான் முதல்வராக ஒப்புக்கொண்டேன்.

ஆனால், நான் யாரை, எனது கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்த ஒருவரை கட்சியின் உயர் பதவிக்குக் கொண்டு வந்தேனோ, நான் தான் கட்சியின் தேசியத் தலைவர். ஆனால், அவரை அந்தப் பதவியில் நியமித்தேன். எனது கட்சி உறுப்பினர்கள் அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.. ஏதோ ஒரு தவறு நடக்கப்போகிறது என்று. ஆனால் நான் அதனை கவனிக்காமல் விட்டுவிட்டேன் என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.