பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஜார்க்கண்டில் மின்சாரம் பாய்ந்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம், ஒப்பந்த வேலை

ஜார்க்கண்டின், ராஞ்சி மாவட்டத்தில் தேசியக் கொடி ஏற்றும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம், ஒப்பந்த வேலை விரைவில் அளிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :22 ஆகஸ்ட் 2022, 10:38 am


ஜார்க்கண்டின், ராஞ்சி மாவட்டத்தில் தேசியக் கொடி ஏற்றும்போது  தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம், ஒப்பந்த வேலை விரைவில் அளிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். 

தாக்கூர் மாவட்டத்தின் கான்கே தொகுதிக்குள்பட்ட அர்சண்டே கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை மாநில குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மிதிலேஷ் குமார் ஞாயிறன்று சந்தித்தார். 

அப்போது அவர், முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவுறுத்தியபடி, குடும்ப உறுப்பினர்களுக்கு ஓரிரு நாள்களில் அரசு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். 

மேலும், குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஒப்பந்த வேலை வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார். 

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மூவர்ணக் கொடியை வீட்டின் மேற்கூரையில் ஏற்றிக்கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி 20 வயது மதிக்கத்தக்க மூவரும் உயிரிழந்தனர். 

தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அவர்கள் பயன்படுத்திய உலோகக் கம்பி, அவர்களது வீட்டின் அருகே இருந்த உயர் அழுத்தக் கம்பியின் மீது உரசியதால், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.