வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தில்லியில் மெல்ல அதிகரிக்கும் டெங்கு: 189 ஆக உயர்ந்த பாதிப்பு

தலைநகர் தில்லியில் இதுவரை கிட்டத்தட்ட 190 பேருக்கு டெங்கு காய்ச்சல் பதிவாகியுள்ளதாக தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:08 am

PTI

தலைநகர் தில்லியில் இதுவரை கிட்டத்தட்ட 190 பேருக்கு டெங்கு காய்ச்சல் பதிவாகியுள்ளதாக தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தில்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 

ஜனவரியில் 23, பிப்ரவரியில் 16, மார்ச்சில் 22, ஏப்ரலில் 20, மே 30 மற்றும் ஜூன் 32, ஜூலையில் 26 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை தில்லியில் 189 டெங்கு பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 13 டெங்கு பாதிப்பு 178 ஆக இருந்தது. ஒரே வாரத்தில் மேலும் 11 பேருக்கு பதிவாகியுள்ளன. 

ஆனால், இந்த நோயால் இந்தாண்டு இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. 

2017ஆம் ஆண்டில், தில்லியில் ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 20 வரையிலான காலகட்டத்தில் 435 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளன. 

கடந்த ஆண்டு, ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 20 வரை நகரில் 682 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதே காலகட்டத்தில், 2020 இல் 51 ஆகவும், 2019 இல் 75 ஆகவும், 2018 இல் 78 ஆகவும் இருந்தது.

தில்லியில் இந்தாண்டு இதுவரை 40 மலேரியா மற்றும் 13 சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளன

இந்த நோய் பாதிப்பு பொதுவாக ஜூலை, நவம்பர் மாதங்களில் பதிவாகும். ஆனால், இந்த பாதிப்பு காலம் டிசம்பர் மத்திவரை நீடிக்கும். 

கொசுக்கள் பெருகுவதற்கு ஏற்ற காலநிலை காரணமாக டெங்கு பாதிப்புகள் முன்கூட்டியே பதிவாகும் சூழல் நிலவுகிறது.

கடந்த ஆண்டு, தலைநகரில் 9,613 டெங்கு பாதிப்புகள் பதிவானது. இது 2015ல் 23 இறப்புகளும், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தலா பத்து பேரும், 2018 இல் நான்கு பேரும், 2019 இல் 2 பேரும் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்.

தில்லியில் 2016ல் 4,431 பேருக்கும், 2017ல் 4,726 பேருக்கும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை 2018இல் 2,798 ஆகவும், 2019இல் 2,036, 2020இல் 1,072 ஆகவும் குறைந்துள்ளது. 2015இல் நகரில் டெங்கு பாதிப்பு 10,600ஐத் தாண்டியது. 

1996-க்குப் பிறகு தில்லியில் ஏற்பட்ட மிக மோசமான டெங்கு பாதிப்பு இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.