நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

26/11 போன்ற தாக்குதல்: மும்பைக்கு வெளிநாட்டிலிருந்து வெடிகுண்டு மிரட்டல்

மும்பையில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய சதித் திட்டம் நடந்து வருவதாக மும்பை போக்குவரத்துக் காவல்துறையின் இலவச உதவி எண்ணுக்கு, வெளிநாட்டிலிருந்து மிரட்டல் வந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:07 am

PTI


மும்பை: மும்பையில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய சதித் திட்டம் நடந்து வருவதாக மும்பை போக்குவரத்துக் காவல்துறையின் இலவச உதவி எண்ணுக்கு, வெளிநாட்டிலிருந்து மிரட்டல் வந்துள்ளது.

மும்பை போக்குவரத்துக் காவல்துறையின் உதவி எண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலம் வந்த ஏராளமான மிரட்டல் செய்தியில், கடந்த 26/11 போன்ற தாக்குதல் நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், மிரட்டல் விடுக்கப்பட்ட எண் வெளிநாட்டைச் சேர்ந்தது என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு வாட்ஸ்ஆப்பில் அடுத்தடுத்து பல தகவல்கள் வந்துள்ளது, இந்த வெடிகுண்டு மிரட்டலில், ஆறு பேர் இந்த தாக்குதலை நடத்துவார்கள் என்றும், மும்பையை வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் 26/11 தாக்குதல் பலருக்கும் நினைவுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மும்பை காவல்துறையின் குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.