பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

திரிபுரா மஹாராஜ் கல்லூரியின் பவள விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு?

திரிபுராவின் மஹாராஜ் பிர் பிர்காம் கல்லூரியில் நடைபெறும் பவள விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்வார் என்று கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் தெரிவித்தார். 

News image

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

Updated On :18 ஆகஸ்ட் 2022, 10:11 am

திரிபுராவின் மஹாராஜ் பிர் பிர்காம் கல்லூரியில் நடைபெறும் பவள விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்வார் என்று கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் தெரிவித்தார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 

புதன்கிழமை நிகழ்ச்சிக்கான ஆயத்த கூட்டத்திற்குத் தலைமை வகித்த நாத், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வருகை சிறப்பானதாக இருக்கும் என்றார். 

செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தின விழாவைக் குறிக்கும் வகையில் பேரணி நடத்தப்படும். மேலும் மாநில அளவிலான ஆசிரியர் தின நிகழ்ச்சியும் எம்பிபி கல்லூரி வளாகத்தில் நடைபெறும். 

மாநிலத்தின் பழமையான கல்லூரியின் 75-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக ஓவியப் போட்டி, கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி, கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.

செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஆளுநர் எஸ்என் ஆர்யா மற்றும் முதல்வர் மாணிக் சாஹா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று அவர் கூறினார்.

செப்டம்பர் 9 ஆம் தேதி எம்பிபி கல்லூரியின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டத்தில் பங்கேற்குமாறு முதல்வர் ஏற்கனவே குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.