பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

அனுமதி இலவசம்: பாரம்பரிய நினைவிடங்களில் குவிந்த மக்கள்

மூன்று நாள்கள் தொடர் விடுமுறை என்பதாலும், கட்டணமின்றி அனுமதிக்கு இன்றே கடைசி நாள் என்பதாலும் நாடு முழுவதுமிருக்கும் பாரம்பரிய நினைவிடங்களில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

News image

அனுமதி இலவசம்: பாரம்பரிய நினைவிடங்களில் குவிந்த மக்கள்

Updated On :15 ஆகஸ்ட் 2022, 10:19 am

மூன்று நாள்கள் தொடர் விடுமுறை என்பதாலும், கட்டணமின்றி அனுமதிக்கப்படுவதாலும் நாடு முழுவதுமிருக்கும் பாரம்பரிய நினைவிடங்களில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரியமிக்க நினைவிடங்களில் ஆகஸ்ட் 5 முதல் 15-ஆம் தேதி வரை பொதுமக்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவா் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பை மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்டிருந்தது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் நாடு முழுவதுமுள்ள நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களில் ஆகஸ்ட் 5 முதல் 15-ஆம் தேதி வரை பாா்வையாளா்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புது தில்லியில் வழக்கமாக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் தாஜ் மகால் உள்ளிட்ட நினைவுச் சின்னம், பாரம்பரிய நினைவிடங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.