தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா பாதித்தவர்களுக்கே மீண்டும் பாதிப்பு; ஆனால்..

கரோனா என்ற அரக்கன் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கிவிட்டான். ஏற்கனவே உலக நாடுகளில் அலைகள் வீசத் தொடங்கி, நாட்டில் மீண்டும் கரோனா அலை எழுமா என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

News image

கரோனா பாதித்தவர்களுக்கே மீண்டும் பாதிப்பு; ஆனால்..

Updated On :20 ஏப்ரல் 2022, 9:17 am


புது தில்லி: கரோனா என்ற அரக்கன் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கிவிட்டான். ஏற்கனவே உலக நாடுகளில் அலைகள் வீசத் தொடங்கி, நாட்டில் மீண்டும் கரோனா அலை எழுமா என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவர்களில் அதிகம்பேர் ஏற்கனவே கரோனா பாதித்தவர்கள்தான் என்கிறது புள்ளிவிவரம்.

ஆனால், நல்வாய்ப்பாக, கரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதமும் குறைவு என்பதே தற்போதைக்கு ஆறுதல் தரும் தகவலாக உள்ளது.

தற்போது நிலவும் சூழலை கவனத்தில் கொண்டு, மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால் மேலும் கரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடும், பெரும்பாலும் குழந்தைகளை அதிகம் தாக்கும் என்கிறார்கள். ஆனால், நான்காவது அலை உருவாகும் அபாயம் குறைவுதானாம்.

குருகிராமைச் சேர்ந்த மருத்துவர் சுஷீலா கட்டாரியா கூறுகையில், நகரப் பகுதிகளிலேயே கரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. காரணம், கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதாலேயே. பொதுமக்கள் அதிகம் கூடுவதற்கு அனுமதி, முகக்கவசம் கட்டாயமில்லை என்பது போன்ற தளர்வுகளால்தான் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது என்கிறார்.

தற்போது கரோனா பாதிப்பு கண்டறியப்படுவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே கரோனா பாதிப்புக்குள்ளானவர்களாக உள்ளனர். நாட்டில் முதல் அல்லது இரண்டாவது அலையின் கரோனா பாதித்து அதிலிருந்து மீண்டவர்களுக்கு தற்போது மீண்டும் பாதிப்பு ஏற்படுகிறது. ஒமைக்ரான் பாதிப்பின் போது மீண்டும் கரோனா உறுதி செய்யப்படுவது குறைவாகவே இருந்தது. ஆனால் இந்த முறை அவ்வாறு இல்லை என்று கூறுகிறார்.

பெரும்பாலான நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேவையும் குறைவாகவே உள்ளது. தடுப்பூசி செலுத்தும் திட்டத்தால், கரோனா மோசமடைவது தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அதே வேளையில் 100 சதவீதம் கரோனா பாதிப்பை தடுப்பூசி தடுத்துவிடாது, நாமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.