சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கரோனா பாதித்தவர்களுக்கே மீண்டும் பாதிப்பு; ஆனால்..

கரோனா என்ற அரக்கன் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கிவிட்டான். ஏற்கனவே உலக நாடுகளில் அலைகள் வீசத் தொடங்கி, நாட்டில் மீண்டும் கரோனா அலை எழுமா என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

News image
கரோனா பாதித்தவர்களுக்கே மீண்டும் பாதிப்பு; ஆனால்..
Updated On :1 பிப்ரவரி 2024, 9:01 am

ENS


புது தில்லி: கரோனா என்ற அரக்கன் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கிவிட்டான். ஏற்கனவே உலக நாடுகளில் அலைகள் வீசத் தொடங்கி, நாட்டில் மீண்டும் கரோனா அலை எழுமா என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவர்களில் அதிகம்பேர் ஏற்கனவே கரோனா பாதித்தவர்கள்தான் என்கிறது புள்ளிவிவரம்.

ஆனால், நல்வாய்ப்பாக, கரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதமும் குறைவு என்பதே தற்போதைக்கு ஆறுதல் தரும் தகவலாக உள்ளது.

தற்போது நிலவும் சூழலை கவனத்தில் கொண்டு, மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால் மேலும் கரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடும், பெரும்பாலும் குழந்தைகளை அதிகம் தாக்கும் என்கிறார்கள். ஆனால், நான்காவது அலை உருவாகும் அபாயம் குறைவுதானாம்.

குருகிராமைச் சேர்ந்த மருத்துவர் சுஷீலா கட்டாரியா கூறுகையில், நகரப் பகுதிகளிலேயே கரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. காரணம், கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதாலேயே. பொதுமக்கள் அதிகம் கூடுவதற்கு அனுமதி, முகக்கவசம் கட்டாயமில்லை என்பது போன்ற தளர்வுகளால்தான் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது என்கிறார்.

தற்போது கரோனா பாதிப்பு கண்டறியப்படுவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே கரோனா பாதிப்புக்குள்ளானவர்களாக உள்ளனர். நாட்டில் முதல் அல்லது இரண்டாவது அலையின் கரோனா பாதித்து அதிலிருந்து மீண்டவர்களுக்கு தற்போது மீண்டும் பாதிப்பு ஏற்படுகிறது. ஒமைக்ரான் பாதிப்பின் போது மீண்டும் கரோனா உறுதி செய்யப்படுவது குறைவாகவே இருந்தது. ஆனால் இந்த முறை அவ்வாறு இல்லை என்று கூறுகிறார்.

பெரும்பாலான நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேவையும் குறைவாகவே உள்ளது. தடுப்பூசி செலுத்தும் திட்டத்தால், கரோனா மோசமடைவது தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அதே வேளையில் 100 சதவீதம் கரோனா பாதிப்பை தடுப்பூசி தடுத்துவிடாது, நாமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.