புது தில்லி: கரோனா என்ற அரக்கன் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கிவிட்டான். ஏற்கனவே உலக நாடுகளில் அலைகள் வீசத் தொடங்கி, நாட்டில் மீண்டும் கரோனா அலை எழுமா என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவர்களில் அதிகம்பேர் ஏற்கனவே கரோனா பாதித்தவர்கள்தான் என்கிறது புள்ளிவிவரம்.
ஆனால், நல்வாய்ப்பாக, கரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதமும் குறைவு என்பதே தற்போதைக்கு ஆறுதல் தரும் தகவலாக உள்ளது.
தற்போது நிலவும் சூழலை கவனத்தில் கொண்டு, மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால் மேலும் கரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடும், பெரும்பாலும் குழந்தைகளை அதிகம் தாக்கும் என்கிறார்கள். ஆனால், நான்காவது அலை உருவாகும் அபாயம் குறைவுதானாம்.
குருகிராமைச் சேர்ந்த மருத்துவர் சுஷீலா கட்டாரியா கூறுகையில், நகரப் பகுதிகளிலேயே கரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. காரணம், கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதாலேயே. பொதுமக்கள் அதிகம் கூடுவதற்கு அனுமதி, முகக்கவசம் கட்டாயமில்லை என்பது போன்ற தளர்வுகளால்தான் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது என்கிறார்.
தற்போது கரோனா பாதிப்பு கண்டறியப்படுவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே கரோனா பாதிப்புக்குள்ளானவர்களாக உள்ளனர். நாட்டில் முதல் அல்லது இரண்டாவது அலையின் கரோனா பாதித்து அதிலிருந்து மீண்டவர்களுக்கு தற்போது மீண்டும் பாதிப்பு ஏற்படுகிறது. ஒமைக்ரான் பாதிப்பின் போது மீண்டும் கரோனா உறுதி செய்யப்படுவது குறைவாகவே இருந்தது. ஆனால் இந்த முறை அவ்வாறு இல்லை என்று கூறுகிறார்.
பெரும்பாலான நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேவையும் குறைவாகவே உள்ளது. தடுப்பூசி செலுத்தும் திட்டத்தால், கரோனா மோசமடைவது தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அதே வேளையில் 100 சதவீதம் கரோனா பாதிப்பை தடுப்பூசி தடுத்துவிடாது, நாமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

250 இசைக் கலைஞர்களுடன் பணியாற்றும் சாம் சிஎஸ்!

மும்பைக்கு எதிராக சதமடித்த முதல் சிஎஸ்கே வீரர்..! சஞ்சு சாம்சன் நிகழ்த்திய பல சாதனைகள்!
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


