தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மடிக்கணினி வெடித்ததில் ஐ.டி. பெண் ஊழியர் கவலைக்கிடம்

மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் படுகாயமடைந்த மென்பொருள் பொறியாளர் 80 சதவீத தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News image

மடிக்கணினி வெடித்ததில் ஐ.டி. பெண் ஊழியர் கவலைக்கிடம்

Updated On :19 ஏப்ரல் 2022, 12:36 pm


கடப்பா: மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் படுகாயமடைந்த மென்பொருள் பொறியாளர் 80 சதவீத தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆந்திர மாநிலம் பி கொடுரு மண்டல் பகுதியல், 23 வயதாகும் மென்பொருள் பொறியாளர், தனது அறையில் அமர்ந்து திங்கள்கிழமை பணியாற்றிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மடிக்கணினி வெடித்துச் சிதறியதில், அறை முழுவதும் தீப்பரவியது.

பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுமலதா, நாள்தோறும் காலை 8 மணிக்கு வீட்டிலிருந்தே பணியாற்றத் தொடங்குவார்.  மடியில் மடிக்கணினியை வைத்துக் கொண்டு நேற்று பணியாற்றிக் கொண்டிருந்த போது அது வெடித்துச் சிதறியது.

அவரது அறையிலிருந்து புகை வருவதைப் பார்த்த பெற்றோர் உடனடியாக அங்கு விரைந்தனர். அப்போது சுமலதா, கருகிய நிலையில் படுக்கையில் மயக்கமடைந்து கிடந்தார். உடனடியாக மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு சுமலதாவை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கிருந்து அவர் திருப்பதியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மடிக்கணினியின் பேட்டரிகள் அதிகம் சூடாவதால், இதுபோன்ற வெடிக்கும் அபாயம் இருப்பதாக, இந்த சம்பவம் குறித்து விசாரித்து வரும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.