சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

‘கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி’: திரிணமூல் காங்கிரஸ்

திரிணமூல் காங்கிரஸ் கட்சி நடைபெற உள்ள கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சியில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லூயிசினோ ஃபெலேரோ தெரிவித்துள்ளார்.

News image
‘கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி’: திரிணமூல் காங்கிரஸ்
Updated On :28 ஜனவரி 2024, 4:16 am

DIN

திரிணமூல் காங்கிரஸ் கட்சி நடைபெற உள்ள கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சியில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லூயிசினோ ஃபெலேரோ தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கோவா மாநில முன்னாள் முதல்வருமான லூயிசினோ ஃபெலேரோ புதன்கிழமை திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அடுத்த ஆண்டு கோவாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அம்மாநிலத்தில் அரசியல் அரங்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், நடைபெற உள்ள கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் கட்சி புதிய முகங்களை வேட்பாளர்களாக களமிறக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் 40 தொகுதிகளிலும் திரிணமூல் தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸ் கட்சி கோவாவில் தனிப்பெரும் கட்சியாக வரமுடியாது எனவும் தெரிவித்தார்.

கோவாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை மாநிலக் கட்சிகளுடன் கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் ஆம் ஆத்மி மற்றும் திரிணமூல் கட்சிகளும் தற்போது போட்டியில் இணைந்துள்ளது அரசியல் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.