பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்தியாவிற்குள் ஊடுருவிய தீவிரவாதிகளை ராணுவத்தினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்.

News image

கோப்புப்படம்

Updated On :23 செப்டம்பர் 2021, 11:43 am

ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்தியாவிற்குள் ஊடுருவிய தீவிரவாதிகளை ராணுவத்தினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்.

இந்திய - பாகிஸ்தான் எல்லையான உரி அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இன்று அதிகாலை 3 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர்.

இதைக் கண்ட இந்திய ராணுவத்தினர் அவர்கள் மூன்று பேரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கி 5, சிறிய ரக துப்பாக்கி 8, கையெறி குண்டுகள் 70 உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையை இந்திய பாதுகாப்புப் படையினர் நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி இதேபோன்ற ஊடுருவல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.