பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நிபா தீநுண்மி: கோழிக்கோட்டில் 68 பேர் தனிமைப்படுத்துதல்

கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் நிபா தீநுண்மியால் 68 பேரை தனிமைப் படுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

கோழிக்கோட்டில் 68 பேர் தனிமைப்படுத்துதல்

Updated On :8 செப்டம்பர் 2021, 8:32 am

கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் நிபா தீநுண்மியால் 68 பேரை தனிமைப் படுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிபா தீநுண்மி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்தத் தீநுண்மியால் கோழிக்கோடு மாவட்ட த்தைச் சோ்ந்த 12 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து சிறுவனின் தொடர்பிலிருந்த அனைவருக்கும் நிபா பரிசோதனை செய்ய மாதிரிகள் எடுக்கப்பட்டு புணே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த வீணா ஜார்ஜ் கூறியது:

கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் நிபா தீநுண்மி தனிமைப்படுத்தல் பிரிவில் 68 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். புணே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட 20 மாதிரிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் யாருக்கும் தொற்றில்லை என தெரியவந்துள்ளது.  

நேற்று 10 பேருக்கு தொற்றில்லை என தெரியவந்தது. மேலும், 21 பேரின் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.