பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

உ.பி.யின் பாஜக எல்எம்ஏ தேவேந்திர பிரதாப் சிங் மாரடைப்பால் மரணம்

உத்தரப் பிரதேசத்தின் பாஜக எம்எல்ஏ தேவேந்திர பிரதாப் சிங் மாரடைப்பால் திங்கள்கிழமை காலை உயிரிழந்தார். 

News image

BJP MLA Devendra Pratap Singh

Updated On :31 மே 2021, 5:50 am

உத்தரப் பிரதேசத்தின் பாஜக எம்எல்ஏ தேவேந்திர பிரதாப் சிங் மாரடைப்பால் திங்கள்கிழமை காலை உயிரிழந்தார். 

அவருக்கு வயது 55. அமபூரைச் சேர்ந்த எம்எல்ஏ மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார்.

அமபூர் எம்.எல்.ஏ.வின் மறைவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

அமபூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள ஹாஜிபூர் கிராமத்தில் வசிக்கும் சிங், மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

சிங் மரணம் குறித்த தகவலின் பேரில், உள்ளூர் பாஜக எம்எல்ஏ விபின் வர்மா டேவிட், மர்ஹாரா எம்எல்ஏ வீரேந்திர லோதி உள்பட ஏராளமான பாஜக தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

எம்.எல்.ஏ.வின் உடலை தனது கிராமத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.