பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கங்கையில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய ஆறு சடலங்கள் மீட்பு

உத்தரப் பிரதேச மாநிலம், கங்கையில் மிதந்து கிடந்த கரோனா பாதிக்கப்பட்டவர்களின் மேலும் 6 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :31 மே 2021, 8:18 am

உத்தரப் பிரதேச மாநிலம், கங்கையில் மிதந்து கிடந்த கரோனா பாதிக்கப்பட்டவர்களின் மேலும் 6 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். 

ஃபதேபூர் சதர் தெஹ்ஸில் சப்-கலெக்டர் (எஸ்.டி.எம்) பிரமோத் ஜா, ஞாயிற்றுக்கிழமை காலை ஆற்றில் மிதக்கும் சடலங்கள் குறித்து தனக்கு தகவல் கிடைத்ததாகவும், அதைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அழுகிய நிலையில் ஆறு உடல்கள் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன என்றார். கரோனா வழிகாட்டுதலின் படி பிட்டோரா கங்கா காட்டில் மருத்துவர்கள் குழு இறுதிச் சடங்குகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். 

சடலங்கள் மிகவும் சிதைந்திருப்பதால் அவற்றை அடையாளம் காண முடியவில்லை, அவை தொலைதூர இடங்களிலிருந்து மிதந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த மாத தொடக்கத்தில், பல்லியாவின் நாராஹி பகுதியில் உள்ள உஜியார், குல்ஹாடியா மற்றும் பாரௌலி காட் ஆகிய இடங்களில் குறைந்தது 52 சடலங்கள் மிதந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.