பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தில்லியில் ரெம்டெசிவிர் அதிக விலைக்கு விற்ற 2 செவிலியர்கள் கைது

தில்லியில் ரெம்டெசிவிர் ஊசியை அதிக விலைக்கு விற்றதாக தனியார் மருத்துவமனை செவிலியர்கள் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

News image

கோப்புப்படம்

Updated On :28 மே 2021, 11:21 am

தில்லியில் ரெம்டெசிவிர் ஊசியை அதிக விலைக்கு விற்றதாக தனியார் மருத்துவமனை செவிலியர்கள் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரோஹினியில் வசிக்கும் அவிச்சல் அரோரா(30), ஷாலிமார் பாக் நகரில் வசிக்கும் பிரதீப் பரத்வாஜ்(34) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவரிடமிருந்து எந்தவித மருந்து சீட்டும் இல்லாமல் ரெம்டெசிவிர் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பரத்வாஜிடமிருந்து வைரஸ் தடுப்பு மருந்தினை பாயல் சவுத்ரி மூலம் ரூ.30,000-க்கு வாங்கியதாகவும், அவற்றை ரூ.40,000-க்கு விற்றதாகவும் அரோரா தெரிவித்தார். பர்த்வாஜ் ஷாலிமார் பாக் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டார். மேலும் ஆறு ஊசிகள் அவரிடம் இருந்து மீட்கப்பட்டன என்று துணை காவல் ஆணையர் ராஜீவ் ரஞ்சன் சிங் கூறினார்.

பரத்வாஜ் மற்றும் சவுத்ரி ஷாலிமார் பாக் தனியார் மருத்துவமனையின் கரோனா வார்டில் செவிலியராக உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஷாபாத்பால் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.