சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தில்லியில் மே 31 முதல் கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள் இயங்க அனுமதி:  கேஜரிவால்

தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில் மே 31 முதல் புது தில்லியில் கட்டுமானப் பணிகளை தொடங்கவும், தொழிற்சாலைகளை இயக்கவும் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அனுமதி வழங்கியுள்ளார்.

News image

தில்லியில் மே 31 முதல் கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள் இயங்க அனுமதி:  கேஜரிவால்

Updated On :28 மே 2021, 9:31 am


புது தில்லி: தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில் மே 31 முதல் புது தில்லியில் கட்டுமானப் பணிகளை தொடங்கவும், தொழிற்சாலைகளை இயக்கவும் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அனுமதி வழங்கியுள்ளார்.

புது தில்லியில் இன்று மக்களிடையே உரையாற்றிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லியில் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகதம் 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 1,100 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா பெருந்தொற்று பாதிப்பு மெல்ல குறைந்து வருகிறது. தற்போது மருத்துமனைகளிலும் படுக்கை வசதிகள் காலியாக உள்ளன. எனவே, தற்போது தில்லியில் தளர்வுகளை அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது.

எனவே, தில்லியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும், தொழிற்சாலைகளை இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மக்கள் கரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ள கேஜரிவால், மீண்டும் கரோனா அதிகரித்தால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.