சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

கரோனா 2-ம் அலையிலிருந்து மீண்டு வருகிறது மும்பையின் தாராவி

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் வெறும் 3 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கரோனா 2-ம் அலையிலிருந்து மீண்டு வருகிறது மும்பையின் தாராவி

Updated On :27 மே 2021, 6:24 am


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் வெறும் 3 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கரோனா 2-ம் அலையிலிருந்து மும்பையின் தாராவி முழுமையாக மீண்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் கரோனா 2ம் அலை தீவிரமடையத் தொடங்கியது முதல் தாராவியில் பதிவாகும் மிகக் குறைந்த கரோனா பாதிப்பு இதுவாகும்.

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியி சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். கரோனா முதல் அலையின் போது தாராவியில் கரோனா வெகுச் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டது, உலக நாடுகளிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. இதுவரை அங்கு 6,798 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. தற்போது 62 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.