சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

புத்ததேவ் பட்டாச்சாா்யா உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்

அவர் நினைவுடன் இருக்கிறார், ரத்தக் கொதிப்பு சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News image

புத்ததேவ் பட்டாச்சாா்யா உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்

Updated On :27 மே 2021, 7:38 am

மேற்கு வங்க முன்னாள் முதல்வா் புத்ததேவ் பட்டாச்சாா்யாவுக்கு (77) கரோனா பாதிப்பு தீவிரமடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் நினைவுடன் இருக்கிறார், ரத்தக் கொதிப்பு சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவரது உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததையடுத்து, அவருக்கு ஆக்ஸிஜன் கருவி மூலம் வழங்கப்படும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அவருக்கு கடந்த வாரம் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் மருத்துவா்களின் அறிவுரைப்படி தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாா். இந்நிலையில், அவரது உடலில் ஆக்சிஜன் அளவு 90-க்கும் கீழ் குறைந்ததையடுத்து, அவா் கொல்கத்தாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ஏற்கெனவே நுரையீரல் மற்றும் சுவாசம் தொடா்பான பிரச்னைகள் இருப்பதால் அவருக்கு கூடுதல் மருத்துவ உதவிகள் தேவைப்படுகின்றன என்று மருத்துவா்கள் கூறினா்.

முன்னதாக, கடந்த 18-ஆம் தேதி புத்ததேவ் பட்டாச்சாா்யா மற்றும் அவரது மனைவி மீராவுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதில் மீரா உடனடியாக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சிகிச்சைக்குப் பிறகு அவா் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினாா். ஆனால், புத்ததேவ் பட்டாச்சாா்யா மருத்துவமனைக்குச் செல்ல விரும்பாததால், வீட்டிலேயே தனிமையில் இருந்தாா். ஆனால், இப்போது கரோனா தீவிரமடைந்துள்ளதால் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரான புத்ததேவ் பட்டாச்சாா்யா 2000-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க முதல்வராக இருந்தாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.