பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கேரள கடற்கரையில் மீன்பிடி படகு கவிழ்ந்தது: ஒருவர் பலி

கேரளத்தின் விஜின்ஜாம் கடற்கரையில் படகுகள் கவிழ்ந்ததில் மீனவர்கள் சிலர் காணாமல் போனதாகவும், ஒருவர் பலியானதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

News image

கோப்புப் படம்

Updated On :26 மே 2021, 8:52 am

கேரளத்தின் விஜின்ஜாம் கடற்கரையில் படகுகள் கவிழ்ந்ததில் மீனவர்கள் சிலர் காணாமல் போனதாகவும், ஒருவர் பலியானதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு பலத்த காற்று காரணமாக படகுகள் கவிழ்ந்ததில், இருவர் மாயமாகியுள்ளனர். இருவரைக் கண்டுபிடிப்பதற்கான மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது.

கடலோர குக்கிராமமான பூந்துராவைச் சேர்ந்த 55 வயதான டேவிட்சனின் சடலம் இன்று காலை ஆதிமலத்துராவிலிருந்து மீட்கப்பட்டதாகக் கடலோர காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடலில் மாயமானவர்கள் பூந்துரா மற்றும் கோட்டாபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜோசப் மற்றும் ஷபரியார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இறந்தவர் உள்பட 17 பேரை ஏற்றிச் சென்ற நான்கு படகுகள் கவிழ்ந்துள்ளன. இந்தியக் கடலோர காவல்படை (ஐ.சி.ஜி) இதுவரை மொத்தம் எட்டு பேரை மீட்டுள்ளது. மீட்டுப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

இதற்கிடையில், திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் பதனம்திட்டாவின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.