பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இந்தியாவில் ஒரேநாளில் 20.66 லட்சம் கரோனா பரிசோதனைகள்

இந்தியாவில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 20.66 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன.

News image

இந்தியாவில் ஒரேநாளில் 20.66 லட்சம் கரோனா பரிசோதனைகள்

Updated On :22 மே 2021, 10:20 am

இந்தியாவில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 20.66 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இது நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் மிக அதிக அளவு மற்றும் உலக சாதனையாகும்.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில், 

தொடர்ந்து நான்காவது நாளாக 20 லட்சத்துக்கு மேற்பட்ட சோதனைகள் நடத்தியுள்ளது இந்தியா. மேலும், 27,76,936 முகாம்களில் 19,33,72,819 தடுப்பூசி மருந்துகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன. 

இவர்களில் முதல் டோஸாக 97,38,148 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இரண்டாவது டோஸாக 66,91,350 பேரும் எடுத்துள்ளனர். 

மேலும் 1,48,70,081 முன்னணி தொழிலாளர்கள் முதல் டோஸையும், 83,06,020 பேர் இரண்டாவது  டோஸையும் செலுத்திக்கொண்டனர். 

18-44 வயதுக்குள்பட்ட 92,97,532 பேர் முதல் டோஸ் எடுத்துள்ளனர். 

45-60 வயதுக்குள்பட்ட 6,02,11,957 பேருக்கு முதல் டோஸ் மற்றும் 96,84,295 பேர் இரண்டாவது டோஸைப் பெற்றுள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்டோர் 5,63,83,760 பேர் முதல் டோஸையும் 1,81,89,676 இரண்டாவது டோஸையும் எடுத்துள்ளனர். 

இந்தியாவின் மருத்துவச் சிகிச்சையில் 29,23,400 பேர் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 3,57,630 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து, ஒட்டுமொத்த மீட்டெடுப்புகள் 2,30,70,365-ஐ எட்டியுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.