பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சத்தீஸ்கரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 16 பேர் காயம் 

சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்தில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 16 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

News image

சத்தீஸ்கரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 16 பேர் காயம் 

Updated On :18 மே 2021, 7:26 am

சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்தில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 16 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உதய்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கும்கா கிராமத்திற்கு அருகே 32 பேருடன் தனியார் பேருந்து ராய்ப்பூரிலிருந்து கர்வா (ஜார்கண்ட்) நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக ​கூடுதல் காவல் ஆணையர் சுனில் சர்மா கூறியுள்ளார். 

பேருந்து ஓட்டுநர் பேருந்தைத் திருப்பும்போது கட்டுப்பாட்டை இழந்ததால், பேருந்து சாலையோர பள்ளத்தில் விழுந்துள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். 

காயமடைந்த 16 பேர் உதய்பூரில் உள்ள ஒரு சமூக சுகாதார மையத்திற்கு மாற்றப்பட்டனர். பின்னர், படுகாயமடைந்த 4 பேர் மாவட்ட மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.