ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சத்தீஸ்கரில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு 

கரோனா பரவலை தடுக்கும் வகையில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக சத்தீஸ்கர் அரசு தெரிவித்துள்ளது. 

News image

சத்தீஸ்கரில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு 

Updated On :15 மே 2021, 10:43 am

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக சத்தீஸ்கர் அரசு தெரிவித்துள்ளது. 

மாநிலத்தில் உள்ள 28 மாவட்டங்களிலும் மே 15-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்து ஊரடங்கு அமலுக்கு வருகின்றது. கரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் சில தளர்வுகள் வழங்கப்படும் என்று மக்கள் தொடர்புத் துறை அதிகாரி தெரிவித்தார். 

மேலும் அவர் கூறியதாவது, 

புதிய வழிகாட்டுதல்களின்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டுமான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும், மேலும் அவை அனைத்து கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் மேற்கொள்ளப்படும். 

ஞாயிற்றுக்கிழமைகளில் மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள், மருந்துக் கடைகள், மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசிய பொருள்கள் ஹோம் டெலிவரி செய்ய அனுமதிக்கப்படும்.

காய்கறி சந்தைகள், திருமண மண்டபம், சினிமா அரங்குகள், மால்கள், கிளப்புகள், நீச்சல் குளங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், ஷோரூம்கள், ஜிம்கள், மத இடங்கள், 

பயிற்சி வகுப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள், மதுபானக் கடைகள் மற்றும் சாலையோர கடைகள் மூடப்படும். 

சுற்றுலா இடங்கள் மூடப்பட்டிருக்கும், பொதுக்கூட்டங்கள் தடைசெய்யப்படும், மாநில அரசின் உத்தரவுப்படி அனுமதிக்கப்பட்ட தேர்வுகள் மற்றும் ஆன்லைன் 
மூலம் நடைபெறும். ஆன்லைன் மூலம் வீட்டுக்கு மதுபானம் வழங்க அனுமதிக்கப்படும். 

இந்த தளர்வுகள் ராய்ப்பூர், துர்க் மற்றும் ராஜ்நந்த்கான் மாவட்டங்களுக்குப் பொருந்தும், மற்ற மாவட்டங்களின் சூழ்நிலைகளின் அடிப்படையில் சில தளர்வுகளை விதிக்கப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.