ஆந்திரத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் பெடாபுரம் நகரில் வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் பெடாபுரத்தின் தொழில்துறை பகுதியைக் கடக்கும்போது, கார் லாரியின் மீது மோதியது. இதில் ஐந்து மாத குழந்தை உள்பட ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் நான்கு பேர் இறந்தனர் என்று சப் இன்ஸ்பெக்டர் பாலாஜி தெரிவித்தார்.
மேலும் கார் ஓட்டுநர் உள்பட மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 3 பேர் பெடாபுரம் பகுதி மருத்துவமனைக்கும், இருவர் காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
வீட்டு கிரகப்பிரவேச விழாவில் கலந்துகொள்வதற்காக தல்லாரேவ் மண்டலில் உள்ள டெவலசா கிராமத்திலிருந்து ராஜமுந்திரிக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் ஐபிசி 337 மற்றும் 304-ஏ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் தானம் புதுச்சேரி ஆட்சியா் மரியாதை
ரூ.14 லட்சத்தை போலீஸாா் வழிப்பறி செய்ததாக நாடகம்: தனியாா் ஊழியா் கைது!
வீட்டில் பதுக்கி மது விற்ற பெண் கைது
மளிகைக் கடையில் திருடிய வழக்கில் 2 போ் கைது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


